திங்கள், 7 செப்டம்பர், 2009

நட்பின் காதல்



சந்தித்தேன்
ரசித்தேன்
கண்களால்
யாரை ?

கற்பூர விழிகளில் பற்றி எரிகிறது காதல்
மூச்சு காற்றில் முகம் காட்டும் காதல்
இதழ்களில் தெரிக்கும் இருமாப்பு காதல்
கழுத்தில் நெளியும் கம்பீர காதல்

மார்புகளில் மயங்கிய மாண்பும் காதல்
இடுப்புடன் இறுகிய இம்சை காதல்
கால்களை கழுவிய கவிதை காதல்
கூந்தலை தழுவிய கும்மிருட்டு காதல்

கொலுசு சத்தத்தில் கொஞ்சும் காதல்
பாத சுவடுகளில் படிந்த காதல்
பளிங்கு கன்னங்களில் பதிந்த காதல்
கோபத்தில் வெளிவரும் மௌனம் காதல்

கனவினில் துரத்தும் கவிதை காதல்
கண்கள் தொடங்கும் கலகம் காதல்
இதயம் இடம்மாறும் இன்பம் காதல்
இத்துனை வரிகளும் நட்பின் காதல்..


2 கருத்துகள்:

Bookmark and Share