திங்கள், 26 அக்டோபர், 2009

சொல்லடி பெண்ணே....

சொல்லடி பெண்ணே....
என்னை காதலை ஏற்பாயா ?
உனக்கு பிடித்ததையெல்லாம்
செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு பிடிக்காத எதையும்
செய்வதில்லை என்பதற்காக..
உன் மகிழ்ச்சியை
இரட்டிபாக்குவேன் என்பதற்கில்லை...
உன் சோகத்தை
பாதியாக்குவேன் என்பதற்காக..
உன் நண்பர்களோடு
நட்பு பாராட்டுவேன் என்பதற்கில்லை...
உன் தனிமையில்
தோள் கொடுப்பேன் என்பதற்காக..
உனக்கு தெரிந்து தான்
எல்லாம் செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு தெரியாமல்
எதையும் செய்வதில்லை என்பதற்காக..

சனி, 24 அக்டோபர், 2009

அவர்களுக்கு தெரியாது.....


எல்லோரையும் போலத்தான்
நானும் காதலை சொல்ல
நண்பர்களிடம் ஐடியா கேட்டேன்....
எளிதாய் சொன்னார்கள்
அந்த பெண்ணிடம் சொல்
நீ அவளை காதலிப்பதை என்று...
காதலை பெண்ணிடம் சொல்வது எளிது தான்..
ஆனால், அவர்களுக்கு தெரியாது....
நான் காதலிப்பது தேவதையை என்று......

Bookmark and Share