திங்கள், 26 அக்டோபர், 2009

சொல்லடி பெண்ணே....

சொல்லடி பெண்ணே....
என்னை காதலை ஏற்பாயா ?
உனக்கு பிடித்ததையெல்லாம்
செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு பிடிக்காத எதையும்
செய்வதில்லை என்பதற்காக..
உன் மகிழ்ச்சியை
இரட்டிபாக்குவேன் என்பதற்கில்லை...
உன் சோகத்தை
பாதியாக்குவேன் என்பதற்காக..
உன் நண்பர்களோடு
நட்பு பாராட்டுவேன் என்பதற்கில்லை...
உன் தனிமையில்
தோள் கொடுப்பேன் என்பதற்காக..
உனக்கு தெரிந்து தான்
எல்லாம் செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு தெரியாமல்
எதையும் செய்வதில்லை என்பதற்காக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share