வியாழன், 23 ஏப்ரல், 2009

குறுங்கவிதை


-- காதல் தோல்வி --

உன் இதயம்

இரும்பென்று

தெரியாமல்

மோதியதில்

என் இதய கண்ணாடியில்

சேதம்....

புதன், 22 ஏப்ரல், 2009

அன்பு நண்பனுக்கு.....



அன்பு நண்பா உனக்கு,

எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது

கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்

உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !

புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது

சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்

மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !

கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்

தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது

கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !

ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,

என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்

துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............

காதல்


பணக்காரர்களுக்கு இது ஒரு பொழுதுபொக்கு
பெற்றோகளுக்கு இது ஒரு பெருந்தொல்லை
ஞானிகளின்கூற்றுபடி இது ஒரு தவநிலை
நம்பிக்கைக்கு இது தான் நட்சத்திரம்!
கவிஞர்களுக்கு இது ஒரு பாடுபொருள்
காளையர்களுக்கு இது ஒரு தேடுபொருள்
கன்னியர்களுக்கு இது ஒரு கண்வித்தை
கலைஞர்களுக்கு இது ஒரு அட்சயப்பாத்திரம்
ஆத்திகவாதியை பொருத்தவரை தேவையற்றது
நாத்திகவாதியை பொருத்தவரை தேவைஇதுதான்
காதல்செய்யாதவரை பொருத்தவரை வேண்டாத வேலை
காதலர்களை பொருத்தவரை இதுதான் வேலை
என்னை பொருத்தவரை,,,
மனித இனத்தின் ஆரம்பம் இதுதான்
உண்மை உணர்ச்சிகளின் உயர்ந்த இடம் இதுதான்
பந்தபாசங்களின் பசுமைபுரட்சி இதுதான்
ஆசாபாசங்களின் ஆணிவேர் இதுதான்

உண்மைகாதல் என்பது உயரிய அன்பை தவிர
வேறொன்றுமில்லை....

மழை


என் கவிதை பயணத்தின் முதல் கைக்குழந்தை ,,,,,,,,
மழையே மந்திர புன்னகை நீ
இயற்கையின் இன்ப மழலை நீ
ஏற்றி விடும் ஏணியும் நீ
ஏறி மிதிக்கும் எத்தனும் நீ
வாரி வ்ழங்கும் வள்ளலும் நீ
வாரி விடும் வக்கிரனும் நீ
ஆனாலும்,,,
எங்கள் நகைப்பே என் அழுகையின் ஆரம்பம் தான்.....

முன்னுரை

வடகரை வேலன் அண்ணாச்சியோட blog (http://vadakaraivelan.blogspot.com) பார்த்ததும் பனிரெண்டாம் வகுப்புகளிலும் , கல்லூரிகளிலும் நான் எழுதிய கவிதைகளை , இணையத்தில் பதிய ஆர்வம் வந்தது , இதோ ஆரம்பித்து விட்டேன்... படிப்பு மற்றும் வேலை நிமித்தம் நின்று போன கவிதை தேடல் மீண்டும் ஆரம்பம்..

எனது முதல் கவிதையையும் ,எனது நண்பனின் பிறந்த நாள் அன்று எழுதிய கவிதையையும் இனி வரும் பதிவில் உங்களோடு பகிர்வதில் இரும்பூதடைகிறேன்.....

Bookmark and Share