சனி, 9 மே, 2009

என் அன்னை...

* உயிர் தந்து மெய் தந்து
உதிரத்தில் பால் தந்து
ஊட்டி வளர்த்தவள்...

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....


* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....

* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* நான்,
தவழும் போது நடையும்
உளறிய போது பேச்சும்
ஓடும் போது விளையாட்டும்
பள்ளிக்கு செல்லும்போது படிப்பும்
போட்டிகளுக்கு செல்லும்போது துணிவும் தந்தவளுக்கு, ,
என்னால் அன்னையர் தினத்தன்று தர இயன்றது,,
தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே... காரணம்,,,
பொருளீட்டல் நிமித்தம் நானும், அன்னையும் வெவ்வெறு ஊர்களில்.....!!!!!

திங்கள், 4 மே, 2009

யார் இவள் ?

இரவு நேரத்தில் நீ இன்றி நானா ?
நெஞ்சம் பதைபதைக்கிறது...
உன் உடல் கொண்டு என் உடல்
மறைப்பதில் தான் எத்துனை சுகம்...!
உன்னை அணைத்து உறங்கிய சில
இரவினில் மூச்சு திணறலும் உண்டு...
ஆயினும்,
எனை குளிர் பயத்திலிருந்து காக்கும்
உன் பணி உயர்வானது
யார் இவள் தெரிகிறதா???
.
.
.
.

வேறு யார்... என் இரவு காதலி சால்வை தான்!!!

அழகிய எல்லோரா...........

புனேவிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நமது மூதாதையர்களின் அற்புத கலை படைப்பு தான் எல்லோரா குகை கோவில்கள்,சைவம்,புத்த மற்றும் சைன மத கடவுளர்களை, மலைகளைகுடைந்து தத்துருபமாக செதுக்கி இருக்கிறார்கள்.பண்டைய மனிதர்களின் இக்கலை படைப்பை காண கண் கோடி வேண்டும்.எல்லோரா குகை கோவிலை காண புனேயிலிருந்து ஔரங்கபாத்திற்கு பேருந்து அல்லது ரயிலில் சென்று ,அங்கிருந்து 30 கிமீ தொலைவுள்ள எல்லோரா குகை கோவில் எனும் மனிதனின் அற்புத கலை படைப்பை வாடகை வாகனத்தில் சென்றடையலாம்.
மேலே இணைக்க பட்டுள்ள புகைபடம் , கடந்த வாரம் நான் அந்த அற்புதத்தை பரவசபட்டப்போது கிளிக்கியது......
Bookmark and Share