சனி, 9 மே, 2009

என் அன்னை...

* உயிர் தந்து மெய் தந்து
உதிரத்தில் பால் தந்து
ஊட்டி வளர்த்தவள்...

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....


* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....

* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* நான்,
தவழும் போது நடையும்
உளறிய போது பேச்சும்
ஓடும் போது விளையாட்டும்
பள்ளிக்கு செல்லும்போது படிப்பும்
போட்டிகளுக்கு செல்லும்போது துணிவும் தந்தவளுக்கு, ,
என்னால் அன்னையர் தினத்தன்று தர இயன்றது,,
தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே... காரணம்,,,
பொருளீட்டல் நிமித்தம் நானும், அன்னையும் வெவ்வெறு ஊர்களில்.....!!!!!

1 கருத்து:

Bookmark and Share