புதன், 19 ஆகஸ்ட், 2009

அக்கால, இக்கால தமிழ் நூல்களின் தொகுப்பு PDF வடிவில்

'' சங்கத்தில் பிறந்தவளே

புது சரித்திரங்கள்

கண்டவளே சிங்க

நிகர் திராவிடத்தின்

சீரிளமை குன்றா செந்தமிழே..

இணைய மொழி உலகிலும்

உன் கொடி தான் பறக்கிறது ஒய்யாரமாய்.. ''

சங்க காலத்து இலக்கியத்தில் தொடங்கி,
பாரதியின் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் வரை நீண்டு,
செயகாந்தன் , வைரமுத்து காலம் வரையிலான நல்ல பலகவிதை , இலக்கியம் , சிறுகதைகள் ஆகியவை மதுரை இலக்கிய மின்தொகுப்பு திட்டம் மூலம் மின்நூலாக பிடிஎப் வடிவில் தொகுத்து இணைய உலகில் தமிழ் இலக்கியம் எடுத்து செல்ல பட்டிருக்கிறது.

இது இனி வரப்போகும் சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியத்தை எளிதாக கொண்டு செல்ல உதவும் என்பது திண்ணம்.

இலக்கிய ரசனை உள்ளவர்கள்.

இங்கே அழுத்தி தமிழ் இலக்கியத்தை பருகலாம்..

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

விழிகளோ பொறு பொறு என்கிறது
இதழ்களோ எடு எடு என்கிறது
பொறுப்பதா எடுப்பதா ஏனடி போடுகிறாய் புதிரை
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கால் சலங்கை சலசலக்கிறது
கை வளையல் கலகலக்கிறது
உதடுகள் மட்டும் உதிர்க்க மறுக்கிறதே ஏன் ?
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்ணோடு கண் பேசி அறிந்த உண்மையை
மூச்சுகாற்றின் அலைகளில் அறிந்த உண்மையை
ஒரு முறையாவது உன் அசைத்து சொல்லிவிடு
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்களால் கவிதை சொல்லும் நீ
காற்றினில் இசை அனுப்பும் நீ
ஏனடி,
உதடுகளால் உண்மையை உதிர்க்க மறுக்கிறாய்..
விரைவில்,
உன் மௌனகீதத்தை மறிக்க செய்து
உதடுகள் வழியே உண்மையை ஜனிக்க செய்திடு....
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சுதந்திரதினம் 1947 !!! 2009 ?????



பண்பாட்டிலும் , பழமையிலும் ,பகுத்தறிவிலும்
வனப்புடன் வளங்கொழித்த பாரத்தேசமே
வணிகமாய் வந்தானே வெள்ளை பரங்கியன்
வளங்களை வாரிசுருட்டியதோடு விட்டிருக்கலாம்
மதிமயங்கியதில் மண்ணாசை வந்ததே!!

சிறப்புற்ற பெரியோரை சிறையில் அடைத்தான்
வெகுண்டெழுந்தனர் விடுதலை வெறியர்கள்
வெள்ளை பரங்கியரை நாராய் கிழித்தனர்..
அன்று,
நள்ளிரவில் கிட்டியது சுதந்திரம் இந்திய தாயிற்கு

முடியரசும் வெளியரசும் மறைந்தோடின
குடியரசும் நல்லரசாய் முடிசூடின
குடிசைவாழ் மக்களும் கூத்தாடினர்
குமரி பெண்களும் சூழ்ந்தாடினர்

இடையில் தான் ஏதோ இன்னல் வந்ததையா
ஈட்டி வைத்த சுதந்திரம்தான் காற்றில் பறந்ததையா
உனக்கா எனக்கா போட்டியில நாற்காலி
ஊர்சனம் படும்பாடோ உடைந்த நாற்காலி

ஆனால் இன்று,
சுதந்திரம் கிடைத்துவிட்டது
பணவான்களுக்கு பள்ளி,கல்லூரிகளை
வியாபார கூடமாக்க..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
வியாபார நோக்கத்திற்காக
பத்திரிக்கை தர்மத்தையும் தாண்டி
எதையும் செய்தியாக்க
செய்திதாள்களுக்கு...

சுதந்திரம் கிடைத்துவிட்டது
கொள்கையில்லாமல் கட்சிதொடங்கவும்
காசுகொடுத்து ஓட்டு வாங்கவும்
அரசியல்வாதிகளுக்கு..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெற்று
பிறப்பிற்கும் , இறப்பிற்கும்
சான்றிதழ் வழங்கிட..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
சாதிய சங்களுக்கும் , இன பிரிவினையாளர்களுக்கும்
தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக
இந்திய தாயை இன்னும் பல
மாநிலங்களாக கூறுகளிட
போராட்டம் நடத்திட..

ஆனால்,
சுதந்திரம் கிடைத்துவிட்டதா
எல்லா இந்திய மக்களுக்கும்
பசியிலிருந்தும் , பட்டினியிலிருந்தும்
வறுமையிலிருந்தும் , வசதியின்மையிலிருந்தும்
அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களிலிருந்தும்...

சுதந்திரம் கிடைத்துவிட்டதா
பெண்களுக்கு
வரதட்சணை வன்கொடுமையிலிருந்து
மறுமண மறுப்பிலிருந்து
ஆணாதிக்க சமூகத்திடமிருந்தும்
கட்டுபாடற்று திரியும் காமுகர்களிடமிருந்தும்....

இறுதியாய் ஒன்று......
கிடைத்துவிட்டதா சுதந்திரம்
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும்
குண்டு துளைக்காத கூண்டின்
வெளியே வந்து.....
சுதந்திர தின வாழ்த்து சொல்ல...????

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

இதோடு நிறுத்திகொள்.....

*உன் கண்களால்

என் கண்களை பறித்து

குருடனாக்கிவிட்டாய்

*என் இதழில்

உன் இதழ் பொருத்தி

எனை ஊமையாக்கிவிட்டாய்

*இதோடு நிறுத்திகொள்

என் மூச்சுகாற்றையும் உறிஞ்சி

எனை சவமாக்கிவிடாதே

நான் சாவதற்கு பிறக்கவில்லை

உன்னோடு வாழ்வதற்கு பிறந்திருக்கிறேன்..

சனி, 8 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை

குறுங்கவிதைகள்....

இயற்கை:

மனிதனின் கட்டுக்குள்
அடங்காத கணப்பொழுது.....

கூந்தல்:

மங்கையர் சிரசினில்
மையல் கொண்ட
கார்மேகம்
கூந்தல்..

கண்:

காதலர்களுக்கென்றே
படைக்கப்பட்ட
தகவல்தொடர்பு சாதனம்..

நட்சத்திரம்:

வானமெனும்
சோலையில்
பூத்திருக்கும் மின்சாரபூக்கள்...
Bookmark and Share