செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தொடருவோம் நம் பயணத்தை...

அன்பு அன்னியமற்று இருக்கும் வரை

ஆசை அளவுக்குள் இருக்கும் வரை

இன்பம் இனிமையாய் இருக்கும் வரை

ஈட்டல் ஈடுகொடுக்கும் வரை


காதல் கண்ணியமாய் இருக்கும் வரை

கற்பு கட்டுக்குள் இருக்கும் வரை

சொந்தம் சொத்து இருக்கும் வரை

சோகம் நினைவு இருக்கும் வரை


துன்பம் இன்பம் வரும் வரை

துயரம் குதூகலம் வரும் வரை

தூக்கம் விழிப்பு வரும் வரை

தூரம் அருகில் வரும் வரை


தன்னம்பிக்கை முயற்சியாய் மாறும் வரை

முயற்சி செயலாய் மாறும் வரை

செயல் வடிவம் பெறும் வரை

வடிவம் வாழ்க்கை தரும் வரை


உழைப்பு உன்னதமாய் மாறும் வரை

ஊக்கம் உயர்வு தரும் வரை

தோல்வி வெற்றியாய் மாறும் வரை

தொடருவோம் நம் பயணத்தை……

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

நம்பிவிடாதே..!!!!

உயிரினும் மேலான... தோழியே,
ஒவ்வொரு இரவும் உன் குறுஞ்செய்தி
வரவுக்காக காத்திருக்கிறது என் செல்பேசி (நானல்ல)

குறுஞ்செய்தி வரவுக்கு பின்
குறு குறுக்கும் பார்வையுடன்
நோக்கின்றன என் கண்கள் (நானல்ல)

செய்தியின் அகம் கண்டு
நகைக்கின்றன, என் உதடுகள் (நானல்ல)

பதில் செய்தி அனுப்ப சொல்லி
என் விரல் பார்த்து நகைக்கின்றன
செல்பேசியின் பொத்தான்கள் (நானல்ல)

நம்பிவிடாதே என் பதில் செய்திகளை....,
எல்லாம் என் செல்பேசியின் லீலை ....
நம்பிவிடாதே (நானல்ல)

திங்கள், 7 செப்டம்பர், 2009

நட்பின் காதல்



சந்தித்தேன்
ரசித்தேன்
கண்களால்
யாரை ?

கற்பூர விழிகளில் பற்றி எரிகிறது காதல்
மூச்சு காற்றில் முகம் காட்டும் காதல்
இதழ்களில் தெரிக்கும் இருமாப்பு காதல்
கழுத்தில் நெளியும் கம்பீர காதல்

மார்புகளில் மயங்கிய மாண்பும் காதல்
இடுப்புடன் இறுகிய இம்சை காதல்
கால்களை கழுவிய கவிதை காதல்
கூந்தலை தழுவிய கும்மிருட்டு காதல்

கொலுசு சத்தத்தில் கொஞ்சும் காதல்
பாத சுவடுகளில் படிந்த காதல்
பளிங்கு கன்னங்களில் பதிந்த காதல்
கோபத்தில் வெளிவரும் மௌனம் காதல்

கனவினில் துரத்தும் கவிதை காதல்
கண்கள் தொடங்கும் கலகம் காதல்
இதயம் இடம்மாறும் இன்பம் காதல்
இத்துனை வரிகளும் நட்பின் காதல்..


Bookmark and Share