செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தொடருவோம் நம் பயணத்தை...

அன்பு அன்னியமற்று இருக்கும் வரை

ஆசை அளவுக்குள் இருக்கும் வரை

இன்பம் இனிமையாய் இருக்கும் வரை

ஈட்டல் ஈடுகொடுக்கும் வரை


காதல் கண்ணியமாய் இருக்கும் வரை

கற்பு கட்டுக்குள் இருக்கும் வரை

சொந்தம் சொத்து இருக்கும் வரை

சோகம் நினைவு இருக்கும் வரை


துன்பம் இன்பம் வரும் வரை

துயரம் குதூகலம் வரும் வரை

தூக்கம் விழிப்பு வரும் வரை

தூரம் அருகில் வரும் வரை


தன்னம்பிக்கை முயற்சியாய் மாறும் வரை

முயற்சி செயலாய் மாறும் வரை

செயல் வடிவம் பெறும் வரை

வடிவம் வாழ்க்கை தரும் வரை


உழைப்பு உன்னதமாய் மாறும் வரை

ஊக்கம் உயர்வு தரும் வரை

தோல்வி வெற்றியாய் மாறும் வரை

தொடருவோம் நம் பயணத்தை……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share