வியாழன், 23 ஏப்ரல், 2009

குறுங்கவிதை


-- காதல் தோல்வி --

உன் இதயம்

இரும்பென்று

தெரியாமல்

மோதியதில்

என் இதய கண்ணாடியில்

சேதம்....

2 கருத்துகள்:

  1. செல்வா,

    மன்னிக்கவும். காதலைப் பற்றிய கவிதைகள் எனக்கு அலர்ஜி. ஏனெனில் காதலைப் பற்றி இன்னும் பாட ஒன்றுமில்லை.

    உறங்காமலே உளறல் வரும்,
    அதுதானே ஆரம்பம்?

    காதலைத் தவிர்த்த பாடுபொருள்தான் உங்களை முழுமையாக வெளிப்படுத்த உதவும்.

    அனுஜன்யா,
    யாத்ரா,
    மண்குதிரை
    தூறல் கவிதை,
    வீனாபோனவன்

    போன்ற வலைப் பூக்களைப் படியுங்கள் அடுத்த 15 நாட்களுக்கு. சுட்டி என் வலைபூவில் உண்டு. அதன் பின் எழுதுங்கள்.

    அடிக்கிற தண்ணிக்கு
    அங்கங்கே கடை இருக்கு
    குடிக்கிற தண்ணிக்கோ
    குடமெல்லாம் தவமிருக்கு.

    இது செல்வேந்திரனின் கவிதை. இது வெளிப்படு்த்தும் உணர்ச்சிகளை உங்கள் கவிதை வெளிப்படுத்த வேண்டும்.

    இன்னொன்று

    இலவசமாய் அரிசி, டி வி
    இயற்கை உபாதைக்கு
    கட்டண கழிப்பிடங்கள்.

    - செல்வராஜ் ஜகதீசன்


    தனிமையின் விளிம்பு
    கிண்ணத்தில் அளந்து
    தட்டில் கவிழ்க்கப்பட்ட
    அளவுச் சாப்பாட்டின்
    வட்ட விளிம்பில்
    பிரதிபலிக்கிறது
    என் தனிமை.

    (c) veenaapponavan@yahoo.com

    ஒரு பேச்சிலரின் அவலத்தை சாதாரண வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.


    தளராமல் எழுதுங்கள். உங்கள் பலம் எது என்பதைச் சீகிரம் கண்டறியுங்கள். அதில் கோலோச்சுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்குங்க.. வடகரை வேலன் சொல்வதையும் மனசில கொள்ளுங்க....

    பதிலளிநீக்கு

Bookmark and Share